அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை
மத்திய அரசின் 2009 கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்க்கு கட்டாய இலவச கல்வி வழங்கப்படுகிறது, மேலும் பழங்குடியின விவகார அமைச்சரகம் மற்றும் சிறுபான்மையின விவகார அமைச்சரகம் சார்பாக 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் இப்போது இந்த கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்ட, 9, 10ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தேசிய கல்வி தேசிய கல்வி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தி பரவியதையடுத்து மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்? மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்!!
பழங்குடியின, சிறுபான்மையின மக்களின் பள்ளி ஆர்வத்தை தூண்டும் வகையில் வழங்கிவந்த கல்வி உதவித்தொகையை திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலித்து வருகிறது.