இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.
IND VS NZ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று 2 வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இடையில் மழை குறுக்கிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் ஆட்டம் 50 ஓவரில் இருந்து 29 ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் குவித்தனர். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இந்த போட்டியில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இந்த ஒரு நாள் தொடரை யார் கைப்பற்றுவார்கள் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 2 வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இனிவரும் 3 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடர் சமநிலை அடையும். இல்லை என்றால் நியூசிலாந்து அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்படும் என்று தான் தெரிகிறது. எனவே இந்த ஒரு நாள் தொடரின் முடிவில் யார் கோப்பையை தட்டிச் செல்வார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.