நடிகர் தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கான சூட்டிங் பணிகள் இப்போதே ஆரம்பித்து விட்டதால் தனுஷ் படு பிஸியாக இருந்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை வைத்து கதையாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் மதுரை அன்புச் செழியன், சன் பிக்சர்ஸ், இயக்குனர் லலித் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனுஷிடம் ஒரு தயாரிப்பாளர் தனது 100 வது படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் தனுஷ் நான் ஏற்கனவே பல படங்களில் கமிட் ஆகிவிட்டேன். எனவே 2025 ஆம் ஆண்டு வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை கேட்ட தயாரிப்பாளர் அதிர்ந்து போய்விட்டார். மேலும் அவரிடம் திரும்பத் திரும்ப கேட்டால் அவர் தயாரிப்பாளர்களிடம் கோபமாக பேசுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டுகளில் தனுஷின் பல படங்கள் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.