சந்தியாவை வசமாக சிக்க வைத்த அர்ச்சனா.., சிவகாமியின் அதிரடி முடிவு.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!

0
சந்தியாவை வசமாக சிக்க வைத்த அர்ச்சனா.., சிவகாமியின் அதிரடி முடிவு.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!
சந்தியாவை வசமாக சிக்க வைத்த அர்ச்சனா.., சிவகாமியின் அதிரடி முடிவு.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் குறித்த அதிரடி ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலுக்கான நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவின் அம்மா, அப்பா இருவரும் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை பற்றி பேசுகின்றனர். அப்போது அர்ச்சனா, சந்தியா இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா? என சிவகாமியிடம் கேட்கிறார். அதற்கு சிவகாமி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அர்ச்சனாவின் அம்மா சந்தியா இந்த வீட்டு மூத்த மருமக அவ கண்டிப்பா இந்த பங்க்ஷன்ல கலந்துக்கணும் என சொல்கிறார். சிவகாமியும் மறுத்து பேச முடியாமல் சரி என்று கூறி விடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிறகு சரவணனிடம் எப்படியாவது சந்தியாவை இந்த பங்ஷனுக்கு கூட்டிட்டு வா என கூறுகிறார். இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்கிறார் சரவணன். பிறகு சந்தியா ஐபிஎஸ் ஆபீஸர் ஈஸ்வரியிடம் இரண்டு நாள் மட்டும் லீவு கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே உன் மீது ஹோட்டலில் பிரச்சனை செய்த விவகாரம் இருக்கு. இந்த நிலையில் லீவு கேட்டால் கண்டிப்பாக கொடுக்க முடியாது. எனவே உன்னோட ட்ரெயினிங் வேலையை போய் பாரு என கூறி விடுகிறார்.

சந்தியாவும் என்ன செய்வது என்று தெரியாமல் தனது பயிற்சியை தொடர்கிறார். ஒருபுறம் எப்படியும் சந்தியா வந்து விடுவார் என சிவகாமி, சரவணன் காத்துக் கொண்டுள்ளனர். ஒரு வேலை இந்த ஃபங்ஷனுக்கு சந்தியா வரவில்லை என்றால் இதை வைத்து அர்ச்சனா, குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டு பண்ணவும் வாய்ப்புள்ளது. எனவே இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here