விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாளான இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ கமலின் அதிரடி பேச்சுடன் வெளியாகியுள்ளது.
கமல் கோபம்:
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கடைசி தினத்தின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வார இறுதி நாளில் எப்போதும் கமல் பங்கேற்று, போட்டியாளர்களிடம் பேசுவது வழக்கம். அதேபோல், உடல் நல குறைவுக்கு பின்பும் கமல் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வார பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாறிப் போயிருந்ததை குறிப்பிட்ட கமல், நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளையும், மனிதர்களையும் சந்தித்திருக்கிறது. எனப்பதிவு செய்தார். வீட்டுக்குள் கவனிக்கப்பட வேண்டிய பல வழக்குகளை பார்க்காமல், அதற்கு உரிய சரியான தீர்ப்பையும் வழங்காமல் ஒரு சிலர் தட்டிக் கழித்துள்ளனர்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், மௌனம் சாதித்துள்ளனர். இதைத் தவறு என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா? இல்லை தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? ஏன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். கமலின் இந்த அதிரடி பேச்சால் இன்றைய எபிசோடில் பல ஹவுஸ் மேட்டுகளுக்கு ஹெவி டோஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.