தமிழகத்தில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு :
தமிழகத்தில், உள்ள கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது. அதன்படி ஐ ஐ எம், ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை, அரசு அறிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி, 2022-23 ம் கல்வியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை குறித்த விண்ணப்பத்தை சிறுபான்மையின நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நீலகிரியில் வீரியமெடுக்கும் புது வைரஸ்.., அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!!
இந்த விண்ணப்பத்தினை, உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த உதவித்தொகை மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் வரை, உதவித்தொகை கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.