மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
பொதுவாக தமிழகத்தில் வேலை இல்லாமல் திண்டாடும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் எக்கச்சக்கம். அவர்களின் திண்டாட்டத்தை ஒழிக்கும் விதமாக அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து வேலை வாய்ப்பு முகாமை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் எப்போது நடக்க இருக்கிறது மற்றும் கலந்து கொள்ளும் முறையை பற்றி இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இந்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த முகாமில் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், வங்கி சேவைகள் காப்பீடு, ஜவுளி, உற்பத்தி போன்ற 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(23.11.2022) – முழு விவரம் உள்ளே!!
மேலும் 40,000 பணியிடங்கள் காலியாக இருப்பதால் உடனே பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுங்கள். இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் தொழிற்கல்வி, செவிலியர், ஆசிரியர், பொறியியல் போன்ற கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் பங்கேற்க விரும்பும் நபர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யுங்கள் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.