Zomato எனப்படும் உணவு வழங்கும் நிறுவனத்தில், இணை இயக்குனராக பணியாற்றிய கௌரவ் குப்தா வேலையை விட்டு நீக்கப்பட்ட செய்தி, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி நீக்கம்:
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து பொருட்களும் ஆன்லைன் வாயிலாகவே கிடைக்கிறது. மருந்து முதல் உணவு வரை அனைத்து பொருட்களும் வீட்டிற்கு வந்து விடுகிறது. உணவு டெலிவரி செய்து வரும் Zomato நிறுவனம், பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.
வாரிசுக்கு வந்த சிக்கல்.., விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி.., உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!!
சமீபத்தில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ராகுல் கஞ்சூ, இன்டர்சிட்டி லெஜெண்ட் சேவையின் முன்னாள் தலைவர் சித்தார்த் ஜாவர் இந்த நிறுவனத்தை விட்டு அதிரடியாக வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தற்போது 2 மாதங்களுக்குப் பின், Zomato நிறுவனத்தின் இணை இயக்குனராக இருந்த கௌரவ் குப்தா தற்போது திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கடந்த 2018 ல் பணிக்கு சேர்ந்த இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இணை நிறுவனராக பணியமர்த்தப்பட்டார். குப்தா இதற்கு முன் மேக் மை ட்ரிப் மற்றும் பெப்சிகோ ஆகியவற்றில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.