ராஜா ராணி சீரியல் முதல் சீசனை விட இப்பொழுது இரண்டாவது சீசன் தான் பிரபலமாக ஓடிக் கொண்டுள்ளது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் என ஒட்டுமொத்தமாக வாழ்ந்து வந்த குடும்பம் திருமணத்திற்கு பிறகு இப்பொழுது சண்டைகளால் பாடுபட்டு வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்…, அடித்து கூறிய அஸ்வின்!!
மேலும் இந்த சீரியலில் இப்பொழுது பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. அதாவது மெயின் ஹீரோயினாக நடித்த ஆலியா மானசா சீரியலை விட்டு விலகி விட்டார். அதனை தொடர்ந்து வில்லியாக கலக்கி வந்த அர்ச்சனாவும் சீரியலை விட்டு விலகி விட்டார். இப்பொழுது அர்ச்சனாவுக்கு பதிலாக அர்ச்சனா குமார் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அவரது இன்டெர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, ஒருவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்றால் அவரது Performance நன்றாக இல்லாமல் இருந்திருக்கும், இல்லை என்றால் அவர்களின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்திற்கு போகும் போது அவர்கள் செட் ஆகாத காரணத்தினால் சீரியல் குழுவே அவர்களை டெர்மினேட் செய்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை VJ அர்ச்சனாவும் இதனால் தான் விலகி இருப்பாரோ என்ற சந்தேகமும் அனைவர்க்கும் எழுந்துள்ளது.