சுந்தரி சீரியலில், கிருஷ்ணா, முருகன், சுந்தரி ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்துடன் சுற்றி வந்த அருண் இன்றைய எபிசோடில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை செய்துள்ளார்.
சுந்தரி சீரியல்:
சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது, அதற்கு முக்கிய காரணம் சுந்தரியின் IAS கனவு தான். இருப்பினும் தற்போது சீரியல் TRACK மாறி வேற எங்க எங்கயோ கதை நகர்ந்து வருகிறது. அதாவது சில மாதங்களுக்கு முன், மாலினி-அருண் கல்யாணத்தை நிறுத்தி மாலினி – கிருஷ்ணா கல்யாணத்தை சுந்தரி போராடி நடத்தி வைத்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போதிலிருந்து அருணுக்கும் சுந்தரிக்கு பகை ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து அருண், கிருஷ்ணா மற்றும் சுந்தரியை பழி வாங்க பல வழிகளில் முயற்சி செய்துள்ளார். ஆனால் அது நிறைவேறவில்லை.
ஐயோ ஷிவானி.., நீங்க இந்த டிரஸ் போடுவீங்கனு யாருமே எதிர்பார்கல.., அப்செட்டாகி துடித்துப்போன இளசுகள்!!
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சுந்தரி மற்றும் கிருஷ்ணா சென்னைக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். அதை அறிந்த அருண், அடி ஆட்களை அழைத்து வந்து வழி மறைக்கிறார். இதை பார்த்து சுந்தரியும், கிருஷ்ணாவும் அதிர்ச்சி ஆகிவிட்டனர். அருண் இவர்கள் இவரையும் வெட்ட வரும்போது, ஹீரோ போல் முருகன் மாமா வந்துவிட்டார். அவர், இவர்கள் இருவரையும் ஊருக்கு கிளப்ப சொல்ல, சுந்தரி மற்றும் கிருஷ்ணா கிளம்பிவிட்டனர். இதையடுத்து அருண் ஆட்களுக்கும், முருகன் மாமாவுக்கு சண்டை நடக்கிறது. அப்போது அருண், முருகனை வெட்டி விட்டார். இதையடுத்து சுந்தரி என்ன செய்வார்? முருகன் உயிர் பிழைப்பாரா? அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.