தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் அதிரடி :
தமிழகத்தில் தவிர்க்க முடியாத பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தஞ்சையில் உள்ள ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று, ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா காரணமாக, தஞ்சை நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. இதுபோக இனி ஒவ்வொரு வருடமும், ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் நேற்று அறிவித்தார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!
தற்போது இந்த சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.