பருவ வயது கொண்ட காதலர்கள், செய்யும் காதல் செயல்கள் குறித்த முக்கிய கருத்து ஒன்றை மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
காதலர்கள் கவனத்திற்கு:
பருவ வயது வந்த பலருக்கும், ஹார்மோன் சுரப்பு காரணமாக, தன் எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பு வருவது வழக்கமான ஒன்று. நாளடைவில் இந்த ஈர்ப்பு காதலாக மாறி பின், ஒரு சிலருக்கு மட்டும், இந்த காதல் திருமணத்தில் போய் முடிகிறது. ஒரு சில காதலர்கள் வீட்டை எதிர்த்து, பதிவு திருமணம் செய்து கொள்வதும், தற்போது நடைமுறையில் ஒன்றாகிவிட்டது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த நிலையில் காதலர்கள் குறித்த பரபரப்பு கருத்து ஒன்றை, மேகாலயா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது, பருவ வயது அடைந்தவர்கள் செய்யும் காதல் செயல்கள், குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வராது என கருத்து தெரிவித்துள்ளது. போஸ்கோ சட்டம் என்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பதை தடுக்கும் ஒரு சட்டமாகும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!
இதன் அடிப்படையில், பருவ வயது வந்த நபர்கள் இதுபோன்ற காதல் செயல்களில் ஈடுபட்டால் இந்த, செயல் போக்கோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்புணர்வில் வராது என மேகாலயா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.