இந்திய அணிக்கான ப்ளெயிங் 11 மாற்றத்தால் தினேஷ் மற்றும் சூர்ய குமார் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது.
சூர்ய குமார்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கான ப்ளேயிங் லெவனில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஏனென்றால் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ராகுல் ஓய்விற்கு சென்று விட்டனர். இதனால் எப்பொழுதும் 4 வது வீரராக களம் இறங்கும் சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் 5 வது வீரராக களமிறங்கியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் 4 வது இடத்தில் களமிறங்கி விளையாடினார்கள். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சில விஷயங்களை சூர்யகுமார் பகிர்ந்து உள்ளார். அதாவது தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடுவதால் நான்காம் இடத்தில் களமிறக்க முடிவு செய்தோம். அவர் எப்போதும் 6 வது இடத்தில் களமிறங்குவார்.
ஜேஸ்மினுக்கு அடித்த ஜாக்பாட், வெண்கலத்தால் கிடைத்த ராணுவ வேலை.., உற்சாகத்தில் இந்திய வீராங்கனை!!
ஆனால் நேற்றைய போட்டியில் 4 வது வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். மேலும் இவர் வெளிப்படுத்திய ஆட்டம் தற்போது எனக்கே பாதகமாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன் என சூரியகுமார் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கான இடத்தை மாற்றி விடுவார்களோ என்ற பயத்தில் உள்ளேன். மேலும் இனி வரும் போட்டிகளில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.