தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி குறித்த பிட்ச் ரிப்போர்ட் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
IND VS SA 2 T20
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து 2வது T20 போட்டி இன்று அசாமில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மறுபுறம் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய காத்துக் கொண்டுள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டி நடைபெறும் மைதானம் பற்றிய பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களது கைவரிசையை நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது.
மேலும் இந்த மைதானம் அதிக ரன் குவிப்பு க்கு ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக இலக்கை நிர்ணயித்தால் எளிதாக வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியில் உள்ள சூர்ய குமார், விராட், ராகுல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் மாயாஜாலத்தை நிகழ்த்துவார்கள் என தெரிகிறது. இந்நிலையில் இந்த T20 போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று பட்டத்தை வெல்லும் என பார்க்கலாம்.