கோலிவுட்டில் ஆல் ரவுண்டராக மாஸ் காட்டி வருபவர் தான் நடிகர் தளபதி விஜய். தற்போது இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் முடிவடைய இருக்கிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் செப் 30 அன்று வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரது மனதையும் களவாடி சென்றது.
அழகே பொறாமைப்படும் பேரழகு.., 16 வயசுல இப்படி ஒரு தோற்றமா அனிகா உங்களுக்கு.., கிறங்கும் இளசுகள்!!
அந்த வகையில் தளபதி விஜய்யும் பொன்னியின் செல்வன் பாடலுக்கு அடிமை ஆடியுள்ளாராம். அதாவது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பாடிய “பொன்னி நதி” என்ற பாடல் நடிகர் விஜய்க்கு ரொம்ப பிடித்துப் போனதாம்.
அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது இந்த பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பார் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.