நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கு, ரயில் புறப்பாடு குறித்த முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளும் முக்கிய திட்டம் ஒன்றை அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
அதிரடி திட்டம் :
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில் சேவை. குறைவான கட்டணத்தில், நிறைந்த சேவையை தரும் இந்த ரயில் சேவையில் பல புதிய மாற்றங்களை ரயில்வே துறை செய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி, பயணிகள் இனி ரயிலின் புறப்பாடு, PNR ஸ்டேட்டஸ் போன்ற அனைத்து விவரங்களையும் தங்களின் whatsapp வாயிலாக தெரிந்து கொள்ளும் முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, RAILOFY என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் 9881193322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் PNR எண்ணை அனுப்பினால், பயணிகளுக்கு தேவையான மொத்த விவரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மாநிலத்தில் மின்சார ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் – பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!
இதன் மூலம், பயணிகள் தங்களுக்கான கால விரயம், மற்றும் பயணச் சுமை ஆகிவற்றை தவிர்க்க முடியும் என ரயில்வே துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் இந்த திட்டத்திற்கு, பயணிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.