தனுஷ் நடிப்பில் உருவான நானே வருவேன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது.
நானே வருவேன்:
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான நானே வருவேன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆன்லைன் புக்கிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனை தொடர்ந்து இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் பட இன்டர்வியூ சூடுபிடித்துள்ளது. ஆனால் அந்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு மட்டுமே கலந்து கொண்டு வருகிறாராம். இதில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலைப்புலி தாணுவிடம் விமர்சகர்கள் தனுஷ் ஏன் கலந்து கொள்ளவில்லை?? என்று கேள்வி எழுப்பினர்.
விஜய் பட நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம் – தயாரிப்பாளர் மழுப்பல்.,போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!!
அதற்கு ஆத்திரம் அடைந்த தாணு இந்த கேள்வியை முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்திடம் கேட்பீர்களா? என்று கோபமடைந்தார். மேலும் தனுஷ் வராததை ஒரு சர்ச்சையாக மாற்றி விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இப்படம் நேராக பொன்னியின் செல்வனுடன் மோதுவதால் ரசிகர்களின் ஆர்வம் தற்போது இருந்து தொடங்கிவிட்டது.