நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை செய்த வழக்கில், அவர் காதலித்ததாக சொல்லப்படும் தயாரிப்பாளர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளதால், போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலன் மழுப்பல்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தீபா என்கிற பவுலின், கடந்த 17ஆம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தெறி, வாய்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் காதலித்ததாக சொல்லப்படும் பிரபல தயாரிப்பாளர் சிராஜுதீன் என்பவர், அவரது மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறார். அதாவது நடிகையை கடந்த 5 மாதமாக தான் தெரியும் என்றும், அவர்தான் ஒருதலையாய் தன்னை காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 6: தேதி, நேரம் குறிச்சாச்சு பா.,எல்லாம் ரெடி ஆகிட்டீங்களா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!!
ஆனால், நீங்கள் காதலிக்கவில்லை என்றால், அவருக்கு ஏன் ஐபோன் வாங்கி கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, அது ஜெசிக்காவின் போன் தான், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார். ஆனால், நடிகையின் ஆண் நண்பர் பிரபாகரன் இருவரும் காதலித்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளர் மழுப்பலாக பதில் அளித்து வருவதால், போலீசார் அவரை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.