தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயினான சமந்தாவுக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்த, படத்தின் அடுத்த பாகத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
வாய்ப்பு இல்லை :
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என திரும்பும் திசை எல்லாம் சமந்தாவின் பெயரே ஒலித்து வருகிறது. தற்போது டாப் ஹீரோயின் லிஸ்டில், சமந்தாவின் பெயர் தான் முதலிடத்தில் நிற்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது புஷ்பா படத்தில், இவர் ஆடிய “ஓ சொல்றியா மாமா” தான்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்தப் பாடலுக்கு இவர் ஆடிய கவர்ச்சி நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில், இது போன்ற ஒரு பாடல் இருப்பதாகவும், அதிலும் சமந்தா தான் ஆடுவார் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பாடலில் சமந்தா ஆடவில்லை என்றும், அதற்குப் பதிலாக 48 வயதான பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா ஆட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்.., அதுவும் இவரின் சொந்த மகனா?? ஆதாரபூர்வ வீடியோ வைரல்!!
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், தன் நிலையிலிருந்து இறங்கி எவ்ளோ கஷ்டப்பட்டு சமந்தா ஆடிய, இந்தப் பாடலின் வாய்ப்பை அசால்டாக, வேறு ஒருவருக்கு மாற்றி விட்டார்களே? சமந்தாவின் மொத்த உழைப்பும் இப்படி வீணாக போய்விட்டதே? என்ற ஆதங்கத்தில் புலம்பி வருகின்றனர்.