இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பில் அவேஞ்சர்ஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி:
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் S.S.ராஜமௌலி. மேலும் வசூலிலும் இவரின் திரைப்படங்கள் தான் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன் படி நான் ஈ, மாவீரன், பாகுபலி போன்ற படங்கள் அடங்கும். இதனை தொடர்ந்து கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் கூட கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இணையத்தில் வெளியான தகவல்கள் உறுதி அளிக்கும் விதமாக பேசியுள்ளார். அதாவது தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாகவும், அப்படம் சாகசங்கள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கூட்டணியில் அவேஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள முக்கிய ஹாலிவுட் நடிகர் சாம்யுவெல் லிராய் ஜாக்சன் என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடடே.., எந்த ஆண்மகனுக்கு இந்த பாக்கியம் கிடைக்காது.., உண்மையை போட்டு உடைத்த ஜெயம் ரவி!!
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் இந்த நடிகர் படத்தில் இருந்தால் கண்டிப்பாக இது ஒரு சாகச படமாக தான் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.