சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரொமோஷனில் நடிகர் ஜெயம் ரவி பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொன்னியின் செல்வன்:
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வருகிற செப் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளது. தற்போது நடந்த புரொமோஷனில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், மிஸ் சென்னை பட்டத்தை வென்ற நடிகை திரிஷா மற்றும் மிஸ் வேல்டு ஷோபிதா போன்ற அழகிகளுடன் சேர்ந்து நடிக்கும் பாக்கியத்தை பெற்றதாக கூறியுள்ளார். இதுவரைக்கும் எந்த நடிகர்களுக்கும் இந்த மாதிரி சான்ஸ் கிடைத்திருக்காது. எனவே இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம் சாருக்கு என்னுடைய நன்றிகள் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது