அடுத்த ஆண்டு நடைபெற உள்ள IPL போட்டி பற்றிய முக்கிய தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
IPL 2023
இந்திய அணியின் BCCI தலைவர் நேற்று அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெண்களுக்கான IPL போட்டிகள் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஆண்களுக்கான IPL போட்டிகள் தொடங்கும் என கங்குலி கூறியுள்ளார்.
இந்த IPL போட்டிகள் அனைத்தும் வழக்கமான விதிமுறைகள் படி தான் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் படி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கமான முறையில் உள்ளூர், வெளியூரில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என கூறியுள்ளார்.
உதாரணமாக CSK அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் போன்ற பெரிய மைதானங்களில் விளையாடும். அதே போன்று மற்ற அணிகளுக்கும் அவங்க சொந்த மைதானத்தில் விளையாடுவார்கள் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.