அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல் – முதல்வர் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல் - முதல்வர் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல் - முதல்வர் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாநில அரசு இந்த திட்டம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிரடி திட்டம் :

நாடு முழுவதும் மத்திய அரசு, பங்களிப்பு பென்ஷன் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் பல மாநில அரசுகள், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாபில், ஆம் ஆத்மி சார்பில் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் பகவத் மான், மீண்டும் இத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வேகமெடுக்கும் 3 வகையான காய்ச்சல்கள் …, நிரம்பும் மருத்துவமனை வார்டுகள்!!

இதனால் விரைவில் இந்த மாநிலத்திலும், பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த அறிவிப்பு எப்போது வரும் என அரசு ஊழியர்கள், வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here