நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உயர்கல்வித்துறை வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்த, அதிரடி அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அதிரடி:
நாடு முழுவதும் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் மனித வளம் மேம்பாட்டு துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 10,000 ம், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20,000 ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள், தொடர்ந்து அதனை பெற உடனடியாக இந்த உதவித்தொகை விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசித்தவர்களுக்கு இனி இலவச உணவு.,,, நாடு முழுவதும் ஸ்மார்ட் மிசின்கள் !!
இது போக 12ஆம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க https://scholarships.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.