ஆலியா மானசா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக சீரியலில் இருந்து விலகினார். மேலும், தனது குழந்தைகளுக்காக சீரியலில் மீண்டும் இணையப் போவதில்லை எனவும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் ரசிகர்கள் மீண்டும் சீரியலில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனிடையே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் சேர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. மேலும், அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் ,வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைப்பக்கங்களில் ஆலியா பதிவேற்றி வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும், அர்ஸ் பிறந்து 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ஆலியா மானசா தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதற்குள் உங்களது மகன் வளர்ந்து விட்டானா என பல கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.