கேரள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வரும், துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் சந்தித்த விமர்சனங்கள் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் பேட்டி:
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், திரையுலகில் அறிமுகமாகி முன்னணி ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் பான் இந்திய மொழிகளில் வெளியான சீதாராமம் என்ற படத்தின் மூலம் புகழின் டாப்புக்கு சென்றுள்ளார். இது குறித்து அண்மையில் பேசிய அவர், இந்த வெற்றியை பெரிதாகப் பார்க்கிறேன். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மோசமான விமர்சனங்களை சந்தித்தேன்.
உனக்கு நடிக்கத் தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும் படியும் என்னை கேவலமாக விமர்சித்தனர். தற்போது இந்த நிலைத்த புகழை சந்திக்க, கடுமையாக உழைத்துள்ளேன். தொடர்ந்து இன்னும் பல வெற்றி படங்கள் கொடுப்பேன் என பாசிட்டிவாக பேசியுள்ளார்.