சமீபத்தில் நடந்த யூடுப் சேனல் பேட்டியில் நடிகை ரெஜினா பேசியது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரெஜினா:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர். அதனை தொடர்ந்து வரிசையாக படங்களில் கமிட் ஆகி நடித்தார். அதில் குறிப்பாக மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் சுதீர் வர்மா இயக்கும் சாகினி டாகினி திரைப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வெளியான ட்ரைலர் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளுகிறது. மேலும் நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து ஒரு யூடுப் சேனலில் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் உணவு அருந்தி கொண்டே தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன் என கூறிவிட்டு, “ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள், ஏனென்றால் இரண்டு நிமிடங்களில் இரண்டும் முடிந்துவிடும்.” கூறியுள்ளார். தற்போது இந்த அடல்ட் ஜோக் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.