பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல இப்போ கதிர் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை சரியா முடிப்பாரா?? இல்லையானு இல்லத்தரசிகள் ஆவலோடு காத்துகிட்டு இருக்காங்க. அதுக்கும் மேல பெரிய ட்விஸ்ட்டா மூர்த்தி மொத்தமா வீட்டையே காலி பண்ண போறாரு.
இன்னொரு பக்கம் ஜனார்த்தனன் அந்த வீட்டை விலைக்கு வாங்க துடியா துடிச்சிகிட்டு வேற இருக்காரு. இப்படி சீரியல்ல ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்டா அடுக்கிகிட்டே போறதால தான் ஓரளவுக்கு ட்ரெண்டிங்கா போயிகிட்டு இருக்கு.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுல கதிரோட கதைக்கு வந்தோம்னா இன்னும் கடைல அந்த அளவுக்கு வியாபாரம் ஆகவே இல்லை. இது மல்லிக்கு சாதகமா போயிடுச்சு. முல்லை நிறைய ஐடியா கொடுத்ததும் கதிர் யோசிச்சுகிட்டே தான் இருக்காரு.
இப்போ சீரியலோட லாஜிக் வச்சு பார்த்தோம்னா கண்டிப்பா ஹீரோ தான் ஜெயிப்பாரு. அப்போன கண்டிப்பா மல்லி ஓட சவால்ல கதிர் முறியடிச்சு காட்டுவாரு. இதுதான் கடைசில நடக்க போகுது. ஆனா வீட்டை யார்கிட்ட விற்க போறாங்க, குடும்பத்தோட நிலைமை என்ன ஆகப்போகுது அப்டின்றது தான் கேள்விக்குறியாகவே இருக்கு. அடுத்து என்ன நடக்க போகுதும்னு பொறுத்திருந்து பார்ப்போமே.