வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் ரெடி!
கடந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி, திடீரென்று டி20 உலகக் கோப்பையில் விஸ்வரூபம் எடுத்து கோப்பையை தட்டி தூக்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு T20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் இந்த போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்கள் பற்றிய தகவல்களை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருவதால் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி, ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ளனர். மேலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஆன சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதே போன்று பந்து வீச்சை பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் தற்போது ஓய்வில் உள்ள பும்ராவும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் T20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் விரைவில் தயாராகிவிடும் என்று தான் தெரிகிறது.