தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கும் உள்ளுறை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக பள்ளிகளின் தரம் அடுத்தகட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளுறைப் பயிற்சி:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர நிதி உதவி போன்றவை அவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை இருப்பதை போன்று தமிழகத்தில் டெல்லி மாதிரி பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த முறை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தமிழக பள்ளிகளில் சில முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன் அடிப்படையில் இந்த வருடம் (2022-2023) இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை பண்பு சீராக இருக்கும் பொழுது கட்டாயம் கல்வித்தரம் மேம்படும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது.