அமெரிக்க ஓபனில் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் செரீனா, வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி தோல்வி அடைந்ததால், வெற்றி பெற்ற செக் நாட்டு ஜோடி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி செக் நாட்டைச் சேர்ந்த லூசி ஹ்ரடெக்கா மற்றும் லிண்டா நோஸ் கோவா ஜோடியை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய செக் நாட்டு ஜோடியை 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் கடைசி போட்டியில் பங்குபெற்ற செரீனா நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தது, ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இரட்டையர் பிரிவில் வென்ற இந்த ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.மேலும் இந்த ஜோடியில் ஒருவரான செரீனா இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.