பிரபல பாடகர் பம்பா பாக்யா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இது ரசிகர்கள் உள்பட அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் மரணம்:
சமீப காலமாகவே இந்திய சினிமா பிரபலன்கள் பலர் மரணத்தை தழுவி வருகின்றனர். இது ரசிகர்கள் உள்பட பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. தற்போது திரைத்துறையில் மற்றொரு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
இவர் தமிழ் உள்பட பல மொழிகளில் பாடல்கள் பாடியவர். குறிப்பாக கோலிவுட்டில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில் போன்ற பல்வேறு படங்களில் பாடகர் பம்பா பாக்யா பாடியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி பாடலை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவருக்கு வயது 49.இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரணமும் அடைந்துள்ளார். இவரின் இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.