மலையாள நடிகை பூர்ணாக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஊடகங்களில் திருமணம் ரத்து என்று தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பூர்ணா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை பூர்ணா:
மலையாள வட்டாரங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பூர்ணா. இதனை தொடர்ந்து தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தற்போதும் நடித்து வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழ் படமான பிசாசு இரண்டாம் பாகத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. ரசிகர்கள் பலரும் பூர்ணாவிடம் இது பற்றி கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை பூர்ணா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும் ‘எப்போதும் என்னவர்’ என்று அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார். இந்த பதிவிட்டால் கூடிய விரைவில் நடிகை பூர்ணாக்கு விரைவில் திருமணம் என்று உறுதி ஆகியுள்ளது.
View this post on Instagram