இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 25வது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு சர்பிரைஸ் ஆக மேங்கோ குல்பி செய்து கொடுத்து அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கர்:
ஊரடங்கு உத்தரவால் வீட்டினுள் முடங்கி உள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் பொழுதைப் போக்கி வருகிறார். இவர் 1990ம் ஆண்டு அஞ்சலியை முதல் முறையாக சந்தித்தார். பின்பு 5 வருட காதலுக்கு பின்னர், 1995ல் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஜுன் என்கிற மகனும், சாரா என்கிற மகளும் உள்ளனர். கொரோனவால் வீட்டில் முடங்கி உள்ள சச்சின் தனது குடும்பத்தினருடன் செய்யும் செயல்களை அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
இவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில், இன்று எங்களுடைய 25வது திருமண நாள். இதனால் வீட்டில் உள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்த மாம்பழ குல்பியை தயார் செய்துள்ளார். இதைத் தன்னுடைய அம்மாவின் ஆலோசனையின் பேரில் செய்ததாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனது மகன் அர்ஜுனுக்கு சச்சின் முடி வெட்டி விடும் விடியோவை பதிவேற்றி அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |