டான் திரைப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அடுத்த திரைப்படத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்:
விஜய், அஜித், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அளவுக்கு சிவகார்த்திகேயனும் தற்போது வளர்ந்து கொண்டே இருக்கிறார். ஒரு வருடத்தில் மட்டுமே இரண்டு திரைப்படமாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிவிடும். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.
திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகியும் இன்னும் டான் திரைப்படம் திரையரங்கங்களில் ஓடி கொண்டிருக்கிறது. டான் திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த திரைப்பட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மண்டேலா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தளபதி 66 படப்பிடிப்பில் ராஷ்மிகா, குஷ்பு .. இணையத்தில் கசிந்த வீடியோ! வைரலாக்கும் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயனின் இந்த 22-வது திரைப்படத்தில் நடிகை சமந்தா அல்லது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் பூஜை நாளை நடைபெற இருக்கிறது. ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க இருக்கும் செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்