‘செர்பெரஸ்’ என்கிற ஸ்மார்ட்போனை தாக்கும் வைரஸ் குறித்து மக்களிடம் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏறபடுத்துமாறு சிபிஐ.,க்கு சர்வதேச போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.
ஸ்மார்ட்போன் வைரஸ்:
ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை ஸ்மார்ட்போனிற்கு அனுப்புவார்கள் எனவும் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யும் பொழுது ‘செர்பெரஸ்’ என்கிற வைரஸ் உள்புகும் என சிபிஐ தெரிவித்து உள்ளது. இது அந்த நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள கிரெடிட் கார்டு போன்ற முக்கிய தகவல்களை தன்னிச்சையாக திருடி விடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மாநில போலீசாருக்கு சிபிஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வங்கிகளில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் போன்று இரு முறை அங்கீகரிக்கும் வசதியுடன் இருப்பதால் பலர் ஏமாந்து இதில் சிக்குவதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனிற்கு வரும் தேவையற்ற குருஞ்செய்தியில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |