அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாக ‘மாடர்னா’ நிறுவனம் அறிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து..!
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் 30க்கும் மேற்பட்ட மருந்து நிறுவன ஆராச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் செலுத்தி சோதனை செய்யப்படுகிறது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ‘மாடர்னா’ தான் உருவாக்கிய தடுப்பு மருந்தை முதலாக 8 மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்துள்ளது.
4 நாட்களில் குணமாகும் கொரோனா – மருந்து கண்டுபிடித்த வங்கதேச மருத்துவர்கள்..!
கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் சோதனை தோல்வி..!
இந்த சோதனையில் மருந்தினை உட்கொண்டவர்கள் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வின் இரண்டாம் கட்டமாக 600 தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் சாதகமான முடிவுகள் கிடைத்தால் 3வது கட்டமாக ஜூலை மாதம் ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |