உலகம் முழுவதும் நேற்று (மே 10) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் தனது வருங்கால குழந்தையின் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் பதிவிட்ட நயன்தாராவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா:
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவிற்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. சில நாட்கள் ரகசியமாக இருந்த காதல் பின்னர் வெளியே தெரிய வந்தது. தொடர்ந்து வெளிநாடுகளில் ஊர் சுற்றுவது, பார்ட்டி என தொடர்ச்சியாக விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் போட்டோஸை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி அவர் பதிவிட்ட புகைப்படமும் அதன் கீழ் இருந்த வசனமும் தான் தற்போது வைரலாகி உள்ளது.
நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய விக்னேஷ் சிவன் தனது குழந்தையின் வருங்கால அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |