மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணை இதோ..!

0
train
train

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பயணியர் ரயில் சேவை:

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கும் மேலாக பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பவும் ரயில்கள்
இயக்கப்பட்டன. இந்நிலையில் மே 12 முதல் அனைவருக்குமான பயணியர் ரயில் சேவை தொடங்க உள்ளது என இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

அதற்கான முன்பதிவு மே 11ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் எனவும், ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் எவ்வித டிக்கெட்டும் வழங்கப்படாது.

ரயில்கள் விபரம்:

முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். பயணத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் ரயில்வே துறை வெளியிட்டு உள்ளது.

முதற்கட்டமாக இயக்கப்படும் ரயில்களுக்கான நேரம், ஊர் ஆகிய விபரங்கள் குறித்த அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here