பிரபல கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ், உடல் நலக்குறைவு காரணமாக தனது 87வது வயதில் காலமடைந்த செய்தியை கேட்டு மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
நடன கலைஞர் மறைவு:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வரூபம். உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான இந்தப்படத்தில் “உன்னை காணாத நான் இங்கு நான் இல்லையே” என்ற பாடல் உலக புகழ் பெற்றது. இந்த பாடலுக்கு நடன ஆசிரியராக விளங்கியவர், பிரபல கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ். இந்த பாடலுக்கு இவர் தேசிய விருது பெற்றார். இதையடுத்து, இவர் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், 83 வயதான இவர் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், மொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்