RRR திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சோக செய்தி வந்துள்ளது. RRR திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
RRR திரைப்படம்:
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அதை விட பிரமாண்டமாக ராஜமௌலி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் RRR. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் திரையரங்கங்களில் இன்று வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக படக்குழுவினர் திரைப்பட வெளியீட்டை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். தற்போது இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்துள்ளது.
இந்த திரைபடத்தில் கொமராம்பீம் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருப்பது போல நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்று நிகழ்வுகளை அப்படியே சித்தரித்துள்ளதாகவும், ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அல்லூரி சௌமியா என்ற மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் பொதுநல மனு ஒன்றையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த திரைப்படம் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்