நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களுக்கு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் பதிவு:
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வழங்கக்கூடிய மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்கு நடிகர் ரஜினி தனது குடும்பத்துடன் டெல்லி சென்றார். இதையடுத்து, சென்னை திரும்பிய இவர் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு ரத்த நாள திசுவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, இவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பிய ரஜினி தனது ட்விட்டர் பதிவில், தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Returned home ? https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்