கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான்க்கு நாயகியாக நடித்த ரித்து வர்மா தனது திருமணம் பற்றிய கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
திருமணம் பற்றி கருத்து:
தமிழ் திரை உலகில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. துல்கர் சல்மானின் நாயகியாக நடித்த இவர் இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனார். இதையடுத்து தற்போது, தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக வருடு காவலேனு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் அவரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்ட நிருபர், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இவர், இன்னும் 4 ஆண்டுகளுக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை என்றும், தன்னை நன்றாக புரிந்து வைத்திருக்கும் பெற்றோரும் இது குறித்து என்னை வற்புறுத்துவதாக இல்லை என்று பேட்டி அளித்துள்ளார். எனவே இவருக்கு தற்போது கல்யாணம் நடைபெறாது என்பது ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்