தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நயன்தாரா தற்போது தனது காதலன் பற்றிய முக்கிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழில் கால் எடுத்து வைத்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கலக்கி வருகிறார். தற்போது வரை இவருக்கு வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இப்பொழுது முதன்முறையாக ஹிந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஒரு நல்ல இடத்தை பிடித்த பிறகு தான் திருமணம் என்பதில் குறியாக இருக்கிறார் நயன்.
இதனால் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே உள்ளார். அவரது அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாத இந்த நேரத்தில் நயன்தாராவிற்கு திருமணம் செய்து விடலாம் என்று அனைவரும் நினைத்திருக்க அதற்கும் நோ சொல்லி விட்டாராம்.
இந்நிலையில் தான் தற்போது அவர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் விக்னேஷ் அன்பான இயக்குனர் என்றும் கூறியுள்ளார். இது என்ன நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த பட்டமா?? என்று செல்லமாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்