தாலிபான்கள் ஆப்கான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பொறுப்பேற்ற புதிய கல்வி அமைச்சர் PhD, Master’s பட்டங்களுக்கு இனி அந்நாட்டில் மதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தங்கள் பிடியில் கொண்டுவந்து முழுதாக ஒரு மாதம் கூட நிறைவுபெறாத நிலையில், புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நேற்று தாலிபான்கள் அறிவித்தனர். தற்போது பல வல்லரசு நாடுகளின் பார்வை கூட ஆப்கானிஸ்தான் மேலேயே உள்ளது.
தற்போது அந்நாட்டின் புதிய கல்வி அமைச்சராக ஷேக் மோல்வி நூருல்லா முனிர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது PhD, Master’s பட்டங்களுக்கு மதிப்பில்லை என்றும் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாரும் அம்மாதிரியான பட்டம் பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பள்ளிக் கல்விசான்றிதழ் கூட இல்லாவிட்டாலும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதாவது அவர்கள் தான் தற்போது சிறந்து விளங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்