மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறையவில்லை:
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து சில்லறை ரீதியாக விற்பனை செய்யப்படும் இந்த பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி சில நாட்களுக்கு முன் சில மாநிலங்களில் குறைக்கப்பட்டது.
இதனை அடுத்து ஒரு சில காசுகள் மட்டும் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்து அதனையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல், இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மதிப்பு நேற்றைய விலையாக இருப்பது கவனிக்க தகுந்தது. கடந்த ஐந்து நாட்களாக குறையாத இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என்பதே பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்