ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று தாலிபான்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாலிபான்கள் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றிய பிறகு பல அதிரடியான மாற்றங்களை அங்கு வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களே எப்படியாவது தாலிபான்களின் பிடியில் இருந்து தப்பிக்கவே விரும்புகின்றனர்.
இதனால் உலக நாடுகளின் மொத்த பார்வையும் தாலிபான்களின் மேலேயே உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் படைகளை தாலிபான்கள் அந்நாட்டை விட்டு வெளியேற கூறி வருகின்றனர். இந்நிலையில் இறுதி எச்சரியாகையாக தாலிபான்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாலிபான்கள் விடுத்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31 ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று தாலிபான்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் ஆலோசனை செய்ததாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்