பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஹோட்டலில் கோபி ராதிகாவுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார். மேலும் அமிர்தா குடும்பம் எழிலின் உதவும் குணத்தை பார்த்து சந்தோஷமடைகின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா மயூவை நினைத்து புலம்பி கொண்டுள்ளார். மேலும் ராஜேஷ் இன்னும் விவாகரத்து கொடுக்காமல் இருப்பதையும் நினைத்து கோபியிடம் கண்கலங்குகிறார். இதெல்லாம் ஒரு ஹோட்டலில் வைத்து பேசிகொண்டுள்ளனர்.
அதே ஹோட்டலுக்கு எழில் தனது பட விஷயமாக நண்பனை பார்க்க வருகிறார். மேலும் கோபி ஒரு படி மேலே சென்று ராதிகாவிற்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் தோளில் சாய்த்து கொள்ள அந்த நேரம் பார்த்து எழில் பார்த்து விடுகிறார்.
இத்தனை தடவை சொல்லியும் தன் அப்பா இன்னும் இப்படி இருக்கிறாரே என்று கோவமடைகிறார். இதனை கோபியும் பார்த்து விடுகிறார். இதனால் மிகவும் அதிர்ச்சியாகிறார். இதனை எப்படி சமாளிப்பது என்று முழித்து கொண்டுள்ளார்.
கோபி பதட்டமாவதை பார்த்து ராதிகா என்ன என்று கேட்க மீட்டிங் இருப்பதாக சொல்கிறார். மேலும் ராதிகாவை தனியாக அனுப்பி விடுகிறார். எழிலுக்கு தன் அம்மாவை நினைத்து மிகவும் கஷ்டமாகிறது. மேலும் எழில் உண்மையை சொல்லி விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ?? என்று பயப்படுகிறார்.
அடுத்ததாக எழில் அமிர்தா வீட்டிற்கு செல்கிறார். அமிர்தா வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க எழில் ஆளை அழைத்து வருகிறார். அமிர்தாவின் அத்தை உன்னை பார்த்தால் என் மகன் கணேஷ் போலவே இருப்பதாக சொல்கிறார். இதனால் குடுமபமே சோகமாகிறது.
“நாம் இருவர் நமக்கிருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்