தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த யாஷிகா தற்போது விபத்தால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விபத்தில் இறந்த அவரது தோழியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த யாஷிகாவின் உடல்நிலை மோசமாக உள்ளதை நினைத்து அவரது ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.
விபத்தில் யாஷிகாவின் தோழி மரணமடைந்ததும் பெரிய சோகம் தான். யாஷிகா எப்பொழுது கண் முழிப்பார் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளார் யாஷிகா. அவரின் நீண்ட நாள் கனவே முன்னணி நடிகராக வேண்டும் என்பது தான்.
அதற்காக தான் தொடர்ந்து போராடி வந்தார். விஜய் டிவியிலும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். யாஷிகா கண்முழிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
யாஷிகா உடல்நிலை பற்றிய வதந்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க யாஷிகாவுடன் பயணித்து விபத்தில் உயிரிழந்த அவரது தோழி பவானியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்