டெல்லியில் கொரோனா தொற்று குறைந்ததால் ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இன்று முதல் திரையரங்குகள், மால்கள், ஜிம்கள் போன்றவற்றை 50 விழுக்காடு நபர்களுடன் திறக்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு 100% பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஊரடங்கு விதிகளை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தளர்த்தும் நடவடிக்கைளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்தந்த அரசு வெளியிட்டு வருகிறது.
தற்போது டெல்லி அரசும் திரையரங்குகள், மால்கள், ஜிம்கள் போன்றவற்றை 50 விழுக்காடு நபர்களுடன் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவை 100 விழுக்காடு பயணிகளுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பேருந்துகளிலும் 100 சதவீதப் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்